சினிமாவில் நடிக்க இது இருந்தா போதும் : நடிகை சாயிஷா

சினிமா துறையில் நடிக்க திறமை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் இருந்தால் போதும் என நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழியில் வெளியான சிவாய் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சாயிஷாவுக்கு தமிழ் சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடந்தது.

பின்பு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.இவருடன் ஜோடியாக நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா தொழில்நுட்பத்தில் உயர்ந்திருக்கிறது என்பதை காப்பான் படத்தில் நடித்தபோது உணர்ந்தேன் என்றும் சாயிஷா தெரிவித்துள்ளார்.

மேலும் நடிப்பதற்கு கண்கள் போதும், 2 கண்களில் எத்தகைய உணர்வுகளையும் வெளிப்படுத்தலாம் மற்றும் அதற்கு பாஷையே தேவை இல்லை என நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version