அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சௌராஷ்டிரா சபை ஆதரவு

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அகில இந்திய சௌராஷ்டிரா மத்திய சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில இந்திய சவுராஷ்டிரா மத்திய சபை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் நடைபெற்றது. அந்த சபையின் தலைமை பொறுப்பாளர் R.B.R ராம சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி கிடைக்க ஒத்துழைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Exit mobile version