சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ,வீட்டு வசதி, தொலைத்தொடர்பு, சுற்றுலாத்துறை, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version