சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்திறப்பு

வலது மற்றும் இடது புறகால்வாய் பாசனத்திற்காக திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இந்த ஆண்டிற்கான வலது மற்றும் இடது புற கால்வாய் பாசனத்திற்காக இன்றுமுதல் வரும் மார்ச் 3ஆம் தேதி வரை 40 நாட்களுக்கு 350 கன அடி விதம் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார். நீர்திறப்பின் மூலம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதியில் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version