சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம்!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் இருந்த போது உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரை, காத்திருப்போர் பட்டியலிலிருந்து பணியிடை நீக்கம் செய்ய டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version