சாத்தான்குளம் வழக்கு : 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை விசாரித்து வரும் மேலும் இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் அடைந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பவன், அஜய்குமார் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

Exit mobile version