சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்தது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அமைச்சர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், படத்தின் மறுதணிக்கை இன்று நடத்தப்பட்டு, அதற்குரிய சான்றிதழை படத்தின் தயாரிப்புக் குழுவினர் பெற்று சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சர்கார் படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறுதணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்பு குழு உறுதி அளித்ததால் படம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார்.படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதால், சர்கார் படம் மீண்டும் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version