கூடுவாஞ்சேரியில் சர்கார் படத்துக்கான டிக்கெட் முன்பதிவின்போது தள்ளுமுள்ளு – ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

காஞ்சிபுரம் அருகே நடிகர் விஜயின் சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்க்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனது செங்கோல் கதையை தழுவி எடுத்துள்ளதாக இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். பின்னர், இருதரப்பிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனின் பெயரை போடுவதாக இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸ் தரப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தநிலையில், சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க கூடியிருந்தனர். அப்போது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர்.

Exit mobile version