பிரதமர் மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை: சரத்குமார்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி அகத்தீஸ்வரம் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை என்றார்.

பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் இம்மாவட்டத்திற்கும் மேலும் பல நல்லதிட்டங்கள் கொண்டுவருவார் என கூறி பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

Exit mobile version