திமுகவில் சாதாரண தொண்டர்கள் உயர்பதவிக்கு வர முடியாது: சரத்குமார்

 

திமுகவில் சாதாரண தொண்டர்கள் கட்சியின் உயர்பதவிக்கு வர முடியாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து, களக்காடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதேபோல், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் அமைதியான ஆட்சி நடத்தும் அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவுக்கு வாக்களித்தால் அது குடும்பத்திற்கு அளிக்கின்ற வாக்கு என்று விமர்சித்தார். இந்த பிரசாரத்தின் போது அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version