பாரதிராஜா என்னவெல்லாம் செய்தார் என்பது நமக்கு தெரியதா? – இரண்டாம் குத்து இயக்குநர் பதிலடி!

16 வயது பெண்களை கவர்ச்சிக்காக பயன்படுத்திய பாரதிராஜா, தன்னை பற்றி குற்றம் சொல்லலாமா என, இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. தற்போது அதன் 2-ம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

 “சினிமா வியாபாரமும்தான்‌… ஆனால்‌ வாழைப்பழத்தைக் குறிகளாகச்‌ செய்து அதைக்‌ கேவலமான பதிவோடு பொதுமக்களின்‌ பார்வைக்குக் கொண்டு செல்லும்‌ நிலைக்கு அவ்வியாபாரம்‌ வந்து நிற்பது வேதனையடையச்‌ செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள்‌ சேர்ந்து இந்த சினிமாவைக்‌ கட்டமைத்தார்கள்‌? சினிமா வாழ்க்கை முறையைச்‌ சொல்லலாம்‌. தப்பில்லை. இலைமறைகாய்‌ மறையாகச் சரசங்கள்‌ பேசலாம்‌. ஆனால்‌ இப்படிப் படுக்கையை எடுத்து நடுத்‌ தெருவில்‌ வைப்பது எந்தவிதத்தில்‌ சரி என்பது?” என்று குறிப்பிட்டு இருந்தார் பாரதிராஜா.

இதுகுறித்து, சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்,1970, 80களில் கவர்ச்சி எனும் பெயரில், இயக்குநர் பாரதிராஜா என்னவெல்லாம் செய்துள்ளார் என்பது நமக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version