வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்

சோதனையின் போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமானவரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பிகில் திரைப்படத்துக்காக வாங்கிய சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய்யின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 24 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், விஜய்யின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய்க்கு, வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version