விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மருத்துவம், குடிநீர், உணவு உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வனப்பகுதிக்குள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version