35 வருடமாக சமயபுரம் மாரியம்மனுக்கு கிராம மக்கள் நேர்த்திக்கடன்

சமயபுரம் மாரியம்மனுக்கு 35 வருடமாக மருங்காபுரி கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட வளநாடு, நல்லூர், துவரங்குறிச்சி முத்துவால்பட்டி, சொறியம்பட்டி, கொடுமபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு கடந்த 35 வருடமாக நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி மாதம் பௌணர்மி அன்று இந்த நேர்த்திக் கடன் செலுத்துவது மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம், கல்யாண வரம், குடும்ப பிரச்சனை, உடல் உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை அம்மன் தீர்த்து வைப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

Exit mobile version