பொதுமக்கள் போராட்டம் – போலீசாருடன் கடும் வாக்குவாதம்

சேலம் மாநகராட்சி பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சியில் உள்ள 27வது கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் தெப்பக்குளம் முதல் லீ பஜார் வரையிலான சாலையை சீரமைக்க கோரியும், குடியிருப்புகளுக்கு சாக்கடை, பொது கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறியதை அடுத்து, சாலையில் நிறுத்தி வைத்திருந்த தடுப்புகளை பொதுமக்கள் அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Exit mobile version