கெங்கவல்லி பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டார். ஆத்தூர் கெங்கவல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தென்னங்குடி பாளையம் ஏரி, திட்டச்சேரி ஏரி, வீரகனூர் ஏரி, துலுக்கலூர் ஏரி, ஜங்கம சமுத்திரம் ஏரி ஆகிய ஏரிகளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், குறித்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Exit mobile version