புதிய அதிமுக நிர்வாகிகள் இணை ஒருங்கிணைப்பாளரிடம் வாழ்த்து

சேலத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் நியமனம் செய்யப்பட்ட, புதிய நிர்வாகிகள் பட்டியலை கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி ஒன்றியம், தெடவூர் பேரூராட்சி செயலாளராக ராஜமாணிக்கம் என்பவரும், கெங்கவள்ளி பேரூராட்சி செயலாளராக இளவரசு ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து, புதிய நிர்வாகிகள் இருவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த விழாவில், கெங்கவள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Exit mobile version