4 மாவட்டங்களுக்கு ரூ.74 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அனுப்பிவைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 74 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேலத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அனுப்பி வைத்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 17 லாரிகளில் , 74 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவராண பொருட்களை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்ற மின் ஊழியர்கள், அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 100 ஜெனரேட்டர்கள், 20 ஆயிரம் மின்கம்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

Exit mobile version