மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு

ஓமலூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, அடைத்து வைத்திருந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவை சேர்ந்த கணேசன், விஜயலட்சுமி தம்பதியினர், தங்களின் 17 வயது மகளை காணவில்லை என்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Exit mobile version