உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊதியம்: அரசாணை வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையிருக்கு 12 கோடியே 14 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதே போல் உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version