மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன்

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில், மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். போட்டியின் போது, காயம் காரணமாக ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், பாதிலேயே வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

Exit mobile version