கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரண பெட்டகம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை, முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து, 5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பாதுகாப்பு காலணிகள், தலைக்கவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள், பாதுகாப்பு கண்ணாடி போன்ற உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை, 25 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 7 தொழிலாளர்களுக்கு வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version