உலக சுற்று சூழல் தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழாவை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில், சார் ஆட்சியர் கலந்து கொண்டு 150 மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தாராபுரம் துணை கண்காணிப்பாளர், விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் நான் மற்றும் எனது குடும்பத்தாரால் இணைந்து நடப்பட்டுள்ள மரங்களை இனிவரும் காலங்களில், எனது குடும்பத்தின் வளர்ச்சியினை போலவே தொடர்ந்து வளர்ப்பதற்கு முழு முயற்சி எடுப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Exit mobile version