மாலத்தீவு அதிபருக்கு bat-யை பரிசாக கொடுத்த மோடி… நன்றி சொன்ன சச்சின்…

அண்மையில் மாலத்தீவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாலத்தீவில் கிரிக்கெட் ஊக்குவிக்கும் வகையில் மோடியின் இந்த செயல் பாராட்டத்தக்கது என்று சச்சின் மோடிக்கு புகழாரம் தெரிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால் அவருக்கு இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட bat-யை பரிசாக அளித்தேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

 

Exit mobile version