சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் நுழைய எதிர்ப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட 3,345 பேர் கைது – கேரள காவல்துறை

சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 3 ஆயிரத்து 345 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம் பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பம்பை, சபரிமலை மட்டுமின்றி கேரளா முழுவதும் போராட்டம் நடந்தது. ஆங்காங்கே போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தநிலையில், சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 345 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சபரிமலை தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வரை கொச்சி போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version