சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜனவரி 22ம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் உள்ள சபரிமலை பற்றிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான வழக்குகள் என்பதால் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version