சபரிமலையில் கேரள போலீஸார் தீவிர கண்காணிப்பு – தடை உத்தரவை மீறிய 60 பேரை கைது செய்தனர்

சபரிமலையில் தடை உத்தரவை மீறியதாக 60 பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டபோது சன்னிதானத்திற்குள் இளம் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் வெடித்தது.

சில இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறையாக உருவானது. இதனிடையே மண்டல பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்டுப்பாடுகளை மீறியதாக 60 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Exit mobile version