சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன்னதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த கேரள அரசு முடிவு

சபரிமலை விவகாரம் தொடர்பாக, மண்டல பூஜைக்கு முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அங்கு சென்ற இளம் பெண்களை தடுத்து நிறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

தீர்ப்புக்கு ஆதரவாக கேரள அரசும், எதிர்ப்பாக சபரிமலை கோயில் நிர்வாகமும் செயல்படுவதால், பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டாலும், கேரள அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்தது.

இந்நிலையில், சபரிமலை கோயிலில், நவம்பர் 16 ம் தேதி துவங்க உள்ள மண்டல பூஜைக்கு முன்னதாகவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட, கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியகியுள்ளது. இதில், சபரிமலை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Exit mobile version