சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு -முன்னெச்சரிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதியில் 144 தடை

சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணி நடை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version