சபரிமலை மண்டல பூஜை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

சபரிமலை மண்டல பூஜை, வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளநிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கேரள தேவசம்போர்டு அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்க உள்ளது. இதையொட்டி அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதில், சபரிமலையில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Exit mobile version