சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பூஜை வருகிற 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த நெற்கதிர்களை ஐயப்பன் கோயில் சன்னதியில் வைத்து வழிபடுவர்கள். கடந்த ஆண்டு பம்பையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் நெற்கதிர்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த ஆண்டு நடைபெறும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version