சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மண்டல பூஜை நடைபெறுகிறது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்குப் பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று மண்டலப் பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு நெய்யபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை மண்டலப் பூஜைகள் நடைபெற்று இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படுகிறது. மண்டல பூஜை நடக்க இருப்பதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். எனவே, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி மாலை மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காகக் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

Exit mobile version