சபரிமலை எங்களுடையது- ஆதிவாசி அமைப்பு அதிரடி

சபரிமலை கோவிலை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிப்பது மட்டுமல்லாமல், பெண்களை அங்கு பூஜை செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது என்றும் பந்தளம் மகாராஜா குடும்பத்தினர்
இதனை கைப்பற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சபரிமலையை மீண்டும் ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜானு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version