மாசி மாத பூஜைக்காக வரும்12ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மாசி மாத பூஜைக்காக வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வழிபாட்டிற்காக 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தேவசம் போர்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனால், கடந்த கால பூஜை காலங்களில் ஏற்பட்ட நிகழ்வையடுத்து, இம்முறையும் பெண்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version