சபரிமலை வழக்கு: வரும் 6-ம் தேதி விசாரணை

சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை 6 ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் கேரளாவில் வன்முறை வெடித்தது. இருந்த போதும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்றியது. இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version