நாளையுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளையுடன் சாத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் புகழ்பெற்ற மகர விளக்கு மற்றும் மகர ஜோதி பூஜைகள் நடைபெற்றது. நாளையுடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து, நாளை காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

இதனால், இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மீண்டும், மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version