தமிழகஅரசு தொழிலாளர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், பதிவு பெற்ற ஆயிரத்து 196 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் வழங்கினார். மேலும், 2 ஆயிரத்து 306 பயனாளிகளுக்கு 68 லட்சத்து 81 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுக ஆட்சியில், அரசு கட்டுமான தொழிலில் ஈடுபட்டும் தொழிலர்களுக்கு, வேலை செய்யும் இடத்திற்கு வாகனத்தின் மூலம் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். பின்னர் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version