13 முறை பெண்ணிடம் கத்திக்குத்து வாங்கியும் அதே பெண்ணிடம் காதலை சொன்ன இளைஞர்

ரஷியாவில் பல வினோத சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது வழக்கம். 13 முறை காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற காதலிக்கு ரஷ்யாவின் Nizhnekamsk பகுதியில் இருக்கும் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட பெண் 13 முறை ஷகுர் என்ற இளைஞரை கத்தியால் குத்தியது நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது.

எனவே குற்றம் நிருபிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உடனே சற்றும் எதிர்பாராமல் கத்தி குத்து வாங்கிய ஷகுர் குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார்.

மேலும், நீதிபதியிடம் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறோம் அதற்கான தேதியையும் தேர்வுசெய்துவிட்டோம். தயவு செய்து தண்டனை கொடுக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.
இதனை கேட்டு குழம்பிய நீதிபதி, அந்த பெண்ணிடம் விசாரித்ததில், சம்பவம் நடைபெற்ற அன்று தான் மது போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்பது பற்றி தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி தண்டனை விவரத்தை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Exit mobile version