உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு

தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆளுநர் ஒப்புதலுடன் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ளது. நகரப்பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு முறையிலும், ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஊரகப் பகுதிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆளுநர் ஒப்புதலுடன் சட்டதிருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version