வேப்பம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2,28,070 பணம் பறிமுதல்

பூவிருந்தவல்லியை அடுத்த வேப்பம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட   2 லட்சத்து 28 ஆயிரத்து 70 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் கணேசன் என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு சென்ற பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்களுடன் பணத்தை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

Exit mobile version