காஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்

காஞ்சிபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ தற்காலிக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள வரதராஜபுரத்தில் சதீஷ் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜாவிற்கு சொந்தமான லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version