பதுக்கி வைத்த ரூ.67 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்தப்படுவதாக சித்தூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி. கிருஷ்ணார்ஜூன ராவ் தலைமையிலான தனிப்படையினர் சித்தூரை அடுத்த மாப்பாக்சி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து, காரை விரட்டி பிடித்த போலீசார், அதனுள் இருந்த புல்லா ரெட்டி மற்றும் மஸ்தான் வலி ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நரிப்பள்ளி குண்ட பகுதியில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை அவர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

Exit mobile version