அரசு பேருந்தில் மறைந்து எடுத்துவரப்பட்ட ரூ.55.5 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பேருந்தில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட 55 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தில் மதுரையை சேர்ந்த கனகராஜ் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முகமது கனிப்பா ஆகியோர் தங்களது இடுப்பில் துணியால் கட்டி மறைந்து எடுத்துவந்த 55 ஆயிரத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணமா அல்லது தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version