உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.5 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த 5 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு, பிற பகுதியில் இருந்து விற்பனை செய்த தொகையை எடுத்து வந்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால், அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், கிருஷ்ணகிரி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version