மேலூர் அருகே வாகன சோதனையில் ரூ.5லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்குடியிலிருந்து மதுரை நோக்கி வந்த மூர்த்தி என்பவரது காரை சோதனை செய்த போது அதிலிருந்த பணம் 5 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்பித்த பிறகு பணம் திரும்ப கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version