குறைந்த விலைக்கு நகை தருவதாக ரூ.5லட்சம் மோசடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குறைந்த விலைக்கு நகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த முத்துபேட்டையை சேர்ந்த பாலசங்கர் என்பவர், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி 4 பேர் ஏமாற்றியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட, பண்டேரிநாதன், மதியழகன், காமராஜ் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவுறுத்தலின் படி குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version