செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்கும் பணிகளைக் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையைச் சீரமைக்க 34
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அணைப்பகுதியில் ஷட்டர் அமைப்பதற்காகத் துளை இடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீரமைப்பு பணிகளைக் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். மதகுகள் சீரமைக்கப்பட்ட பின் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய வட்டங்களில் 7 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

Exit mobile version