போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

நெல்லை மாவட்டம் திரிகூடபுரத்தில் காவல்துறை பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டது. சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் பேருந்து ஏற காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு பேருந்து மோதியதில் ஆயிஷாபீவி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி முதலமைச்சர் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 3 லட்சத்திற்கான காசோலையை துணை ஆட்சியர் பழனிக்குமார் பெண்ணின் கணவரிடம் வழங்கினார்.

Exit mobile version