மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தில் கடந்த 15 ஆம் தேதி செல்வன் தீனா என்பவர் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல், சிட்லப்பாக்கத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சேதுராஜ் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தநிலையில், எதிர்பாராத உயிரிழப்பை அறிந்த முதலமைச்சர், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தீனா மற்றும் சேதுராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version