சிவகங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 26 லட்சம் நிவாரணத் தொகை

சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 26 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை, கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகளும் சேதமடைந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 26 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Exit mobile version